தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகமெங்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Yes to referendum என்ற பெயரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெருஞ்செயற் திட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டிருந்த இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடாத்துவதற்கு பிரதமர் பணிமனையில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.

தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் அரசியற்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழைப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.

இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.

இவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.

இத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.

ஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.

இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.

இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

பசிலால் இராணுவம் காட்டிக்கொடுப்பு சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

போரின் போதும் போருக்குப் பின்னரும் இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாண த்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ படையினர் போர்க்குற்றங்க ளில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் சில தனிநபர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராணுவத் தளபதியும், தற் போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத் துவதற்காக பஷில் ராஜபக்ஷ முழு இராணு வத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார்.

ராஜபக்ஷக்களை சிறுபான்மை மக்கள் வெறுப்புடன் நிராகரித்தனர். தேர்தல் முடிவுகளில் இது தெளிவாக வெளிப்படுத்தப்ப ட்டது. இந்த நிலையை மாற்றி, பாசத்தை காட் டுவதற்காக, இராணுவத்தைப் பயன்படுத்தியு ள்ளார் பஷில் ராஜபக்ஷ.
நாங்களும் கூட தமிழ் மக்களின் இதய ங்களை வென்றிருக்கிறோம். ஆனால் நாங் கள் நியாயமான வழிமுறையைப் பயன்படுத்தினோம்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவைக் குற்றம்சாட்டி நான் வெளியிட்ட கருத்துக்கும், பஷில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

நான் ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம்சாட்டவில்லை. யாரையும் பெயரைக் கூறாமல் குற்றம்சாட்டவில்லை.
ஒருவர் மீது தெளிவாக எனது குற்றச் சாட்டை சுமத்தியிருந்தேன். எழுந்தமான மாக தனிநபர்கள் என்று கூறவில்லை.

ஜெனரல் ஜயசூரியவுடன் இருந்த கோப்ரல் ஒருவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. போர் முடிவுக்கு வந்து இர ண்டு வாரங்களின் பின்னரும் ஜெனரல் ஜய சூரிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் என்று அவர் எனக்குத் தகவல் வழங்கினார்.
ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டை நான் சுமத்திய போது, அதனைக் கடுமை யாக விமர்சித்த தனிநபர்கள், அரசியல்வாதி கள், பிக்குகள் ஏன் பஷில் ராஜபக்ஷவின் அறி க்கைக்குப் பின்னரும் மௌனமாக இருக்கின்றனர்.
என்னை விரோதியாக சுட்டிக்காட்டியவ ர்கள் மற்றும் போர் வீரர்களின் பாதுகாப்பி ற்காக பேசியவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது எந்த கண்ணீரும் சிந்தவில்லை.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யாராவது குற்றவாளிகள் என்று அறிந்தால், அவர்கள் நீதிக்கு முன்கொண்டு வரப்பட வேண்டும்.
தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடி க்கை எடுக்கப்படவில்லை என்றால், நாட்டுக்கு அவமானமே ஏற்படும்.

யாராவது ஒருவர் குற்றங்களைச் செய்த தற்கான ஆதாரங்களை மறைத்தால், அவ ர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share:
Read More

கண்ணில் போட்ட டாட்டூ: மொடலுக்கு நடந்த விபரீதம்

கனடாவில் மொடலாக திகழும் காட் காலிங்கர் எனும் 24 வயது இளம்பெண் கண்களில் டாட்டூ போட்டதால் கண் பார்வையை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் உலகிற்கு கூறுவதாவது, கண்களில் டாட்டூ போட்டதால், கண் பார்வை பறிபோகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. டாட்டூ போட்டுக் கொண்ட பின் எனது கண்ணில் இருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதனால் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தேன். 

ஆனால் டாட்டூ மை கண்ணின் கார்னியாவை பாதித்து விட்டதால் என் கண் பெரிதாக வீங்கி, இமையைத் திறக்க முடியாமல் பார்வை குறைந்து போனது. பின் இதற்காக நான் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் கண்களையும், பார்வையை பழைய நிலைக்கு மீட்க முடியவில்லை. என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். 



அதனால் எனது கண் பார்வையை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். அதன் முன் எனக்கு ஏற்பட்ட இப்பாதிப்பை உலகத்திடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை போல எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். எனவே கண்களில் டாட்டூ போடும் முன் தகுதியான, 

தரமான டாட்டூ கலைஞரா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள், அதோடு முடிந்தளவு கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்து விடுங்கள் என்று காட் காலிங்கர் தெரிவித்துள்ளார்.
Share:
Read More

வைகோவுடன் 35 சிங்களவர்கள் தகராறு!


ஜெனிவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார். கடந்த 18ஆம் தேதிமுதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இன்று இரண்டு முறை பேசினார். வைகோவின் உரை இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை 1,46,000 தமிழர்கள் படுகொலை தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது. தமிழ் பெண்கள் துயரம் இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது தமிழ் இனக் கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது. தமிழ்ப்பெண்கள், குறிப்பாக, 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன்,தந்தை,பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள். நடவடிக்கை தேவை தமிழ் ஈழப் பகுதியில் இருந்து இலங்கை அரசின் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இனத்தை மொத்தப் பேரழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கவுன்சிலும் முன்வர வேண்டும் என்றார். வைகோவின் இரண்டாவது உரை வருகின்ற நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து, அனைத்துலக ஆய்வு நடைபெறப் போகின்றது. முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக்குற்றங்களில் இருந்தும், 2015 தீர்மானத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது. தமிழர்கள் சித்ரவதை இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது. மாணவர்கள் சுட்டுக்கொலை உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீசாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது. ஈழத்தமிழ் பெண்கள் கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத்தமிழ்ப்பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களின் விம்மல்களையும், அழுகைச் சத்தத்தையும் மனித உரிமைகள் கவுன்சில் செவி கொடுத்துக் கேட்கட்டும். கொடுமையான போது பால சேனா அமைப்பு, சிங்களக் குண்டர்களைக்கொண்ட அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது. சர்வதேச நீதி விசாரணை ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும் இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும். நேரில் சென்று விசாரிக்க வேண்டும் மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். சிங்களவர்கள் முற்றுகை இந்த உரையை, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர். ஆனால்,உரை முடித்துவிட்டு இரண்டு எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் பலர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார். தொப்புக்கொடி ரத்த உறவு உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார். கொலைகார பாவிகள் அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள் எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள் என்றார். 35 முன்னாள் ராணுவத்தினர் இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம் தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள். அந்தப்பெண்மணி வைகோவுடன்தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது. வைகோவின் பாதுகாப்பு பற்றி அச்சம் இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள்கவுன்சிலுக்குள்வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது . கடந்த வெள்ளிக்கிழமை அன்றே வைகோவை அடையாளம்காட்டிச் சிங்களவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலைப்படுகின்றார்கள்.
Share:
Read More

புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல சீன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதுமாகும் – மு. திருநாவுக்கரசு

ஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ,  ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும்.

இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர்.

ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு கொண்டிருக்கவல்ல இலக்கை கண்டறிவதிலிருந்துமே ஒரு யாப்பைப் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். இன்று நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அரசியல் யாப்பை அத்தகைய அடிப்படையில் இருந்து ஆராய்ந்து அறியவேண்டியது அவசியம்.

1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு உருவான காலகட்டத்தில் பொதுவாக தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது சிங்கள-பௌத்த தலைவராக இருந்த பரண் ஜெயதிலக ஓர் இலகுவான சூத்திரம் ஒன்றை முன்வைத்தார். அதாவது “தமிழர் டொனமூர் யாப்பை எதிர்ப்பதால் அந்த யாப்பை சிங்களவர் ஆதரிக்க வேண்டும்” என்பதே அந்த சூத்திரமாகும். தமிழர் எதை ஆதரிக்கின்றார்களோ அதை எதிர்க்க வேண்டும்  அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது இனவாதம் சார்ந்த அரசியல் சமன்பாடும், சூத்திரமுமாக நடைமுறை பெற்றது.

1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு உருவான காலத்தில் சிங்கள மக்களுக்கு சிறந்த இரண்டு தலைவர்கள் கிடைத்தார்கள். ஒருவர் டி.எஸ்.செனநாயக்க மற்றவர் டி.எஸ்.செனநாயக்கவின் மூளையாக செயற்பட்ட சேர். ஓலிவர் குணதிலக ஆவார்.
டொனமூர் காலம் குடியேற்றவாத ஆதிக்கத்திற்குரிய சகாப்தமாக இருந்தது. ஆதலால் குடியேற்ற ஆதிக்கத்தை இந்துமாகடலில் நிலைநிறுத்துவதற்குப் பொருத்தமாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைப் பேண வேண்டியது அவசியமாய் இருந்தது.இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியில் சிங்களவர்களை அணைப்பதன்மூலம் அந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையை தமக்கு சாதகமாக பேணலாம் என்பதால் அதற்கேற்ப பெரும்பான்மை இனநாயகத்திற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை டொனமூர் உருவாக்கினார்.

சோல்பரி யாப்புக் காலம் குடியேற்ற ஆதிக்கம் முடிவடைந்து நவகுடியேற்ற ஆதிக்கம் தொடங்கிய காலம். ஆதலால் சுதந்திரம் அடையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை அரசியல் இராணுவ ரீதியில் தமது சார்ப்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பிரித்தானியருக்கு இருந்தது. இந்நிலையில் இந்திய எதிர்ப்புவாத அச்சத்தை சிங்களத் தலைவர்களிடம் முன்னிறுத்தி பெரும்பான்மை இனமான சிங்கள  பௌத்தர்களை திருப்திபடுத்தவல்லதான நாடாளுமன்ற முறையிலான பெரும்பான்மை இனநாயகத்தை உறுதிப்படுத்தும் யாப்பை சோல்பரி உருவாக்கினார்.

அதேவேளை இன, மதம் சார்ந்த பிரச்சனைகள் நவீன இலங்கையின் அரசியலில் பெரிதும் தலையெடுத்திருந்ததை பிரித்தானியர் கண்கூடாக கண்டிருந்தனர். நவீன இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரம் 1883ஆம் ஆண்டு சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட கலவரமாக அமைந்தது. அடுத்து 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கம்பளைக் கலகம் அமைந்தது.

மேலும் தமிழ் – சிங்கள முரண்பாடு இலங்கை அரசியலில் நீக்கமற இருந்தமை வெளிப்படையானது.  கிறிஸ்தவர்களாக காணப்பட்ட சிங்கள அரசியல் குடும்பங்கள் அனைத்தும் பௌத்தர்களாக மாறாமல் அரசியல் செய்ய முடியாத யதார்த்தம் சோல்பரி காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இவ்வகையில் பரண் ஜெயதிலக குடும்பம், S.W.R.D.பண்டாரநாயக்க குடும்பம்; D.S.செனநாயக்க குடும்பம், ஓலிவர் குணதிலக குடும்பம் சேர். ஜோன் கொத்தலாவல குடும்பம் வில்லியம் கோபல்லாவ குடும்பம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன குடும்பம் என்ற அனைத்து சிங்களத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களையே கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆனால் இக் கிறிஸ்துவக் குடும்பங்கள் எல்லாம் பௌத்தத்தை நோக்கி மதம் மாறும் போக்கை பிரித்தானியர்கள் கவலையுடன் நோக்கத் தவறவில்லை.

தமிழர் பக்கம் இத்தகையப் போக்கும் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரியது. ஆதலாற்தான் ஒரு கிறிஸ்தவரான S.J.V.செல்வநாயகத்தால் 30 ஆண்டுகளாக “தந்தை” என்ற  மகுடத்துடன் தமிழ் மக்களுக்குத் தலைவராக இருக்க முடிந்தது. இப்போக்கை பிரித்தானியர் சரிவர புரிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
இப்பின்னணியில் கிறிஸ்தவர், முஸ்லிம், தமிழர் என்ற அனைவரையும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான 29ஆவது பிரிவை அரசியல் யாப்பில் சோல்பரி உருவாக்கினார்.

அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபையை உருவாக்கியதிலும் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானியர்கள் உருவாக்கிய பெரும்பான்மை இனநாயக அரசியல் யாப்பு மரபானது அவர்கள் விரும்பிய 29வது பிரிவையும் செனட் சபையையும்; இலகுவாக விழுங்கி ஏப்பமிட்டது.

1972ஆம் ஆண்டு உருவான அரசியல் யாப்பு இருவகை இனவாத விருத்தியைக் கொண்டு அமைந்தது. முதல் இரண்டு அரசியல் யாப்பையும் உருவாக்கிய பிரித்தானியர்களின் பிரதான இலக்காக கேந்திர நலன் அமைந்திருந்தது. அந்த கேந்திர நலனை பிரித்தானியருடன் பரிமாறிய அதேவேளை தமக்கான பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை நாணயத்தின் மறுபக்கமென சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாக இணைக்கத் தவறவில்லை.

இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சி என்பது முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் பெரிதும் பௌத்த இனவாத நலன்கள் முதன்மைப்படுத்தப்படுவதாகவும் ஏனைய இனங்கள் பின்தள்ளப்படுவதுமான இருநிலை வளர்ச்சிப் போக்கு காணப்பட்டது.

பண்டாரநாயக்க குடும்பத்தினர் தமது குடும்ப அரசியல் பரிமாணத்திற்கு ஊடாக ஒருபுறம் தம்மை இந்தியாவின் நண்பர்களாக காட்டிக் கொண்டு மறுபுறம் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தையும் தமிழருக்கு எதிரான இன ஒடுக்குமுறையையும் அரங்கேற்றும் தந்திரத்தைப் பின்பற்றினர். 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இத்தகைய மூலோபாயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்பட்ட 29ஆவது பிரிவு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபை நீக்கப்பட்ட ஒருசபை ஆட்சிமுறை கொண்ட அரசியல் யாப்பாக அமைந்தது. ஒருசபையைக் கொண்ட ஒற்றையாட்சி என்பது மேலும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இலகுவானதாக அமைந்தது.

மேற்படி இருவிடயங்களிலும் அரசியல் யாப்பு வளர்ச்சியடைவதற்குப் பதிலாக அது தேய்வடைந்தது. அதேவேளை பௌத்த பேரினவாதம் யாப்பில் தெளிவாக முன்னிறுத்தப்பட்டது. இதன்படி பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையும் பொறுப்பும் என்றும் வரையப்பட்டது.

1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட 2வது குடியரசு அரசியல் யாப்பானது மேற்படி சிங்கள-பௌத்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி தமிழின அழிப்பை முன்னெடுக்கவல்ல யாப்பாக அமைந்தது. முதலாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டவாக்க சபை வாயிலான இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்;தியது. ஆனால் 2வது குடியரசு அரசியல் யாப்பானது நிர்வாக வகையில் நிறைவேற்ற அதிகாரம் சார்ந்த இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை நோக்கி வளர்வதற்கான நிலைமையை தோற்றுவித்தது.

நிர்வாக அர்த்தத்தில் ஜனாதிபதி ஏகப்பட்ட அதிகாரங்களுடன் இன ஒடுக்குமுறை செய்யவல்ல சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைக் கொண்டவரானார். 1977ஆம் ஆண்டு ஜெயவர்த்தன பதவியேற்கும் போது இலங்கை இராணுவம் 8000 ஆயிரம் படையினரைக் கொண்ட ஒரு சம்பிரதாயபூர்வ இராணுவமாகவே இருந்தது. ஆனால் அவர் 1979ஆம் ஆண்டு உருவாக்கிய “பயங்கரவாத தடைச்சட்டத்தின்” கீழான இராணுவ ஆட்சி கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இலங்கை இராணுவம் தமிழருக்கு எதிரான யுத்தம் புரியும் நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாக மாறியது.தமிழின எதிர்ப்பின் அடிப்படையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த பாரீய இராணுவ கட்டமைப்பை வளர்த்து இன்று 3 இலட்சம் படையினர் என்ற வகையில் அது பெருகியுள்ளது. அத்துடன் அந்த இராணுவத்தின் ஆடுகளமாக தமிழ் மண்ணே தொடர்ந்தும் காணப்படுகிறது.

இந்த யாப்பின் கீழ்தான் இராணுவம், புலனாய்வுத்துறை, S.T.F. எனப்படும் விசேட படைப்பிரிவு மற்றும் பொலிஸ், பொலிஸ் புலனாய்வுத்துறை என்பனவெல்லாம் தமிழின எதிர்ப்பின் பேரால் அசுர வேகத்தில் விருத்தியாகின.
இவ்வகையில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பானது இரத்தம் சிந்தும் இன ஒடுக்குமுறைக்குப் பொருத்தமான நிர்வாக மற்றும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை ஏற்படுத்திய யாப்பாக பரிணாமம் பெற்று அது இலங்கையின் அரசியலில் நீக்கமற கலந்துவிட்ட ஒரு யதார்தமாகக் காணப்படுகிறது.

இத்தகைய சர்வாதிகார மற்றும் இராணுவ புலனாய்வு சார்ந்த அரசியல் இன ஒடுக்குமுறையின் வடிவில் விருத்தியடைந்து இவை இலங்கையின் அரசியலில் பலமான அங்கங்களாகிவிட்டன. இத்துடன் ஏற்கனவே வளர்ந்து வந்த பௌத்த நிறுவன அரசியல் ஆதிக்கமும் இணைந்து இலங்கையின் அரசியலை இன ஒடுக்குமுறைக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கட்டமைப்பாக உருவாக்கிவிட்டன. இக்கட்டமைப்பின் கீழ்த்தான் இலங்கையில் தமிழ் மக்களை அரசால் இரத்தம் தோய்ந்த பேரழிவிற்கு உள்ளாக்க முடிந்தது.

இவற்றை நிராகரிக்கவல்ல ஒரு புதிய  அரசியல்யாப்பை சிங்கள ஆட்சியாளர்கள் இனிமேல் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்களால் அப்படி அது முடியவும் மாட்டாது. இந்நிலையில் மகாசங்கத்தினரதும், இராணுவத்தினதும் கட்டளையை மீறி ஜனாதிபதிகளினாலோ, பிரதமரினாலோ, அமைச்சர்களினாலோ செயற்பட முடியாது என்ற வளர்ச்சி நிலை ஏற்பட்டு விட்டது. எனவே தோற்றப்பாட்டடில் உள்ள அரசியல் யாப்பிற்கு அப்பால் செயல் பூர்வமான அர்த்தத்தில் மகாசங்கத்தினரும், இராணுவத்தினருமே உண்மையான அரசியலதிகாரம் கொண்ட அரசியற் சக்திகளாவர்.

நல்லாட்சி அரசாங்கம் என்பதின் பேரில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரு புதிய அரசியல் யாப்பின் வாயிலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், படுகொலைகளுக்கு அரசியல் தீர்வுகாணும் வகையிலான யாப்பு உருவாக்கப்படும் என்று சிறிசேன  ரணில் – சந்திரிக உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்களும், அவர்களுடன் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தன.

அதன் படி போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நீதி என்பனவும் வானைப் பிளக்கவல்ல உறுதிமொழிகளாக எழுந்தன. ஆனால் உயர்நிலை தளபதிகள் முதல் அடிநிலை இராணுவ வீரன் வரை எந்தொரு படையினரையும் உலகில் உள்ள எந்த நாட்டவரும் கைது செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றும் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பலமாக உள்ளதென்றும், பலவாறாக ஜனாதிபதி சிறிசேன பிரகடனம் செய்யும் நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கான எத்தகைய நீதிக்கும் நியாயமான தீர்விற்கும் இடமில்லை என்பது புலனாகிறது.

இந்தவகையில் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த புதிய யாப்பின் உள்ளடக்கம் என்ன என்பதே பிரதான கேள்வியாகும்.
நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இலங்கை அரசும், இலங்கை ஆட்சியாளர்களும், இலங்கை இராணுவமும் அபகீர்திக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த அபகீர்த்தியில் இருந்து தம்மை தற்காத்து அரங்கேற்றிய இனப்படுகொலையால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றி அந்த  இனப்படுகொலையை வெற்றியாக மாற்றுவதற்கு “நல்லாட்சி” என்ற ஒரு ஆயுதத்ததை ஒரு கருவியாக கையில் ஏந்தினர். நல்லாட்சி. நல்லிணக்கம் என்பன மேலும் இன ஒடுக்குமுறை முன்னெடுப்பதற்கான  புதிய வடிவங்களேயாகும்.
நல்லாட்சி, நல்லிணக்கம் என்பனவற்றின் ஓர் அங்கமாக புதிய யாப்பு பற்றிய விடயமும் முன்வைக்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் தமக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களைக் களையவும், நெருக்கடிகளை தீர்க்கவும் ஏற்றவகையில் ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் நிர்வாக நிறுவனமட்டங்களிலான நடவடிக்கைகள் என்பனவற்றைக் காட்டி குறிப்பாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவது அதன் ஓர் இலக்காக உள்ளது. இவை இனப்பிரச்சனைக்கான  தீர்வல்ல. வெறும் மனிதஉரிமைகள் பிரிச்சனையல்ல தமிழர்களின் பிரச்சனை.

அது ஆழமான தேசிய இனப்பிரச்சனையாகும். ஆனால் ஒரு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை யாப்பில் உருவாக்குவதாக காட்டிக் கொண்டு அதனை ஒரு ஜனநாயக மீட்சி என்றும் அது தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கல் என்றும் அரசாங்கம் தன்னை சோடனை செய்வதற்கான தேவை இந்த யாப்பில் பூர்த்தி செய்யப்பகிறது. இங்கு இனப்பிரச்சனைக்கு தீர்வோ, நியாயமோ, நீதியோ கிடையாது. பழைய 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனால் அதற்குக் குறைந்த வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வை இந்த யாப்பில் அரசாங்கம் முன்வைக்கிறது..

சாப்பாட்டுக் கடைகள் சிலவற்றில் நேற்றை பழங்கறிகளை ஒன்றாகச் சேர்த்து புதிதாக சில பூசணிக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து பழங்கறியை புதிய சாம்பாராக ஆக்குவது போல இந்த புதிய அரசியல் யாப்பும் பழங்கறிகளைக் கொண்ட ஏமாற்றுகரமான ஒரு புதிய சாம்பாராகும்.

மகாசங்கத்தினர் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் எதுவும் இல்லை என்று ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிதென்று எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட இனப்படுகொலை வடுவில் இருந்து தம்மை தற்காப்பதற்கு புதியதாக பழைய கறியுடன் சில புதிய பூசணிக்காய் துண்டுகளை கலந்துள்ளார்கள். இது உலகத்தை ஏமாற்றுவதற்கான வித்தை. இனப்பிரச்சனை அடிப்படையில் இதற்கு எந்தப் பெறுமானமும் கிடையாது.

அத்துடன் 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து இனயுத்தத்தின் பேரால் சீனா இலங்கை அரசிற்கு பேருதவி புரிந்தது. 21ஆம் நூற்றாண்டில் இந்து மாகடலில் தனக்கான ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் சீனாவிற்கு இலங்;கையில் நிகழ்ந்த இனப்படுகொலை யுத்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. சீனா ஆசியாவில் தலையெடுக்கும் முன்பு இலங்கை அரசு இந்திய ஆதிக்க அச்சத்திற்கு எதிராக குறிப்பாக பிரிதபிரித்தானிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை நம்பிய துணையை நாடியது.

ஆனாலும் நீண்டகால நோக்கில் இந்தியாவை பகைப்பது மேற்குலகிற்கு பாதகமானது என்பதால் மேற்குலம் எச்சரிக்கை கலந்த ஆதரவே இலங்கை அரசுக்கு அளித்து வந்தது. ஆனால் தற்போது ஆசியப் பேரரசாக சீனா எழுந்துள்ள நிலையில் அதுவும் அது தனது இந்து மாகடல் ஆதிக்க நலனுக்காக நிபந்தனையற்ற ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கக்கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்ள வல்ல ஒரு சக்தியாக நீண்டகால நோக்கில் சீனாவை இலங்கை பார்க்கிறது.

ஆதலால் ஐ.தே.க, சு.க என்ற பழைய பனிப்போர்கால கட்சி வேறுபாடுகளைக் கடந்து இருகட்சிகளும் சீனாவை ஆதரிக்கவல்ல நிலையைக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பில் மேற்குலகத்தை சமாளிக்கவல்ல வகையில் மனிதஉரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் ஒருபுறமும் அதேவேளை சீனாவின் ஆதரவைப் பெற்று மேற்குலகையும், இந்தியாவையும் எதிர்கொள்வதற்கான பலத்தை நிலைநிறுவத்துவது இன்னொரு புறமும் இவற்றின் பின்னணயில் இனஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கான யாப்பை பலப்படுத்துவதும் இன்னொருபுறமுமென முப்பரிமாணம் கொண்ட மூலோபாயத்தை இந்த புதிய யாப்பு கொண்டுள்ளது.

பிரித்தானியர் உருவாக்கிய டொனமூர், சோல்பரி யாப்புக்கள் காலனிய ஆதிக்கம் மற்றும் நவகாலனிய ஆதிக்கம் என்பனவற்றிற்குப் பொருத்தமாக உருவாக்கப்பட்ட நிலையில் சிங்கள தரப்பை திருப்திபடுத்துவதற்கேற்ற பெரும்பான்மை இனநாயக யாப்பு மரபை பிரித்தானியா வளர்த்து அதனை இலங்கையின் அரசியல் நடைமுறையாக்கினர்.

அந்த தளத்தில் அடுத்துவந்த முதலாவது குடியரசு அரசியல் யாப்பு பௌத்த மேலாதிக்கம், மற்றும் இருந்த இனஉரிமைகள் பற்றிய பழைய யாப்பின் ஏற்பாடுகளைப் பறித்தல் என்பனவற்றை செய்தது. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டசபை ஆதிக்க வளர்ச்சிக்கு அப்பால் நிர்வாக ரீதியான ஆதிக்கத்தையும், இராணுவ கட்டமைப்பு புலனாய்வு ஆதிக்கத்தையும் வளர்த்து அவற்றை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அரசியல் யதார்த்தமாக்கியது

அப்பின்னணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அரங்கேற்றப்பட்டு தமிழினம் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அவமானங்களையும், தடைகளையும் நீக்குவதற்கும் புதிய ஆசிய வல்லரசாக எழுந்துள்ளதும், உலக வல்லரசாக எழுவதுமான சீனாவுடன் கூட்டுச் சேருவதற்கும், இந்தியாவிற்கு எதிரான தமது அரணை சீனா வாயிலாக வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் ஒரு புதிய அரசியல் யாப்பு பற்றிய உத்திக்கு இலங்கை அரசு போய் உள்ளது.

இதில் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வு என்பதன் வாயிலாக இனப்பிரச்சனைக்கான தனது ஒடுக்குமுறையை மேலும் திடமாக முன்னெடுக்கவும், வளர்ந்திருக்கும் இராணுவ கட்டமைப்பை தமிழர் மீதான ஆதிக்க சக்தியாக விரிவாக்கவும் ஏற்ற வகையில் இந்த யாப்பு உருவாகிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொண்;டு தமிழருக்கு எதிரான இனஒடுக்குமுறையை அது இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுக்கிறது.

இப்பின்னணியில் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பானது மேலும் இன அழிப்பை இலகுபடுத்துவதற்கேற்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. இத்தகைய வடக்கு-கிழக்கு இணைப்பற்ற மாகாணசபை கட்டமைப்பு என்பதும் இன ஒடுக்குமுறைக்கான ஒரு முக்கிய கருவியாக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை.

காலணி ஆதிக்க காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரித்தானிவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்த சிங்கள ஆட்சியாளர்கள் பின்பு பனிப்போர் காலத்தில் இந்தியாவுக் கெதிராக அமெரிக்காவுடன்  கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்தனர். தற்போது சீனா ஆசியப்பேரரசாக வளர்ந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சவாலாக சீனாவை முன்னிறுத்தி தமிழர்களைப் பலியெடுக்கும் இன்னொரு சர்வதே ரீதியான தளத்திற்கு முன்னேறியுள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இவையெதிலும் உணர்வற்ற மேம்போக்கான அரசியல் வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

பேரரசாக எழுச்சி பெறும் சீனாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி. அதனை வாய்ப்பான வகையில் இலங்கையில் முன்னிறுத்தி இந்தியாவையும், அமெரிக்காவையும் கட்டுப்படுத்தும் தந்திரத்தில் இலங்கை முன்னேறுவதனால் இதன்வாயிலாக தமிழருக்கான உரிமைகளை மறுப்பது இலங்கைக்கு இலகுவாகிறது.
மறுபுறம் சீனாவை இலங்கை முன்னிறுத்துவதனால் தமிழ்மக்களுக்கான உரிமை விடையத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும் பின்தள்ளவும் இலங்கையால் முடிகிறது. இங்கு சீன – இந்திய ௲ அமெரிக்க முக்கோணப் போட்டியை இலங்கை முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. மொத்தத்தில் இதற்கு தமிழர்களே முதற்பலியாகிறார்கள்.

இறுதி அர்த்தத்தில் தமிழர்கள் பலியாகுவது என்பது இலங்கை முழுவதிலும் சீனா மேலோங்குவதும் அதன் வாயிலாக தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நீண்டகால அடிப்படையில் மேலாதிக்கத்திற்கான வலுவைப்பெறமுடிகிறது.

நடந்து முடிந்த இனப்படுகொலைப் பின்னணியில், இந்து மாகடலில் ஏற்பட்டிருக்கும் புதிய வல்லரச ஆதிக்கப் போட்டியின் பின்னணியில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வானளாவ உயர்ந்திருக்கிறது. அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பயன்படுத்தி தமிழ்மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்குப் பதிலாக இப்பேரம்பேசும் சக்தியை ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு இசைவாக அவர்களின் காலடியில் ஒப்படைத்துவிட்டு அடிதொழும் அரசியலால் தமிழ் மக்களின் எதிர்காலம் மீளமுடியாத அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படுகிறது.
Share:
Read More

தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள் வரிசையில் வரும். அது இடைச்சொறுகலாக வந்தது. 


ஆனால் தமிழர்களின் பண்பாடு தொன்று தொட்டு வருவது. அறிவியலை தவிர வேறு எந்த பின்னணி காரணங்களும் இருக்காது. இன்றைக்கு இருக்கும் பல உலக மொழிகளுக்கு வேர் மொழியானது தமிழ். காலத்தின் கட்டாயம் நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது. தற்போது கொரியா உலகையே எதிர்த்து போராடும் அளவிற்கு தற்சார்பு உடைய நாடாக மாறி இருக்கிறது என்றால், அங்கு தமிழ் கலாச்சாரமும் ஒரு வகையில் வேரூன்றி இருக்கிறது. நம்கிம் எனும் கொரியர் ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் உள்ளதாக கோவை செம்மொழி மாநாட்டில் தமதாய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். 


அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது எது என்பதை அவரே விளக்குகின்றார். கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக அவர் பணியாற்றுகின்றார். ஒரு நாள் தொடர் வண்டியில் அவர் பயணிக்கும்போது ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தமிழில் பேசியதைக் கவனித்துள்ளார். அவர்களின் பேச்சில் பல சொற்களின் ஒலிப்புக் கொரிய மொழிச் சொற்களைப் போல இருந்துள்ளன. அவர்களிடம் பேசியபோது அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள். பிறகுதான் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார்
Share:
Read More

இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !

நேற்று திங்கட்கிழமை, ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்திருந்தார். அதன் போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள். பிரான்சில் இடம்பெற்ற ஜூலை 14 நிகழ்வுகளில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. அதன் போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு ட்ரம்பினை வெகுவாக கவர்ந்திருந்தது. 


இதுபோன்ற அணிவகுப்பை தாம் முதன்முறை பார்த்ததாக அப்போது தெரிவித்திருந்தார். அதன் பின்னர், நேற்று இடம்பெற்றிருந்த சந்திப்பில் மீண்டும் அதை நினைவு படுத்தினார் ட்ரம்ப். ஜூலை 4 ஆம் திகதி அதே போன்றதொரு அணிவகுப்பை தாம் நிகழ்த்த உள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், 'ஜூலை 14 நிகழ்வை விட சிறந்ததாக நிகழ்த்த முயற்சி செய்கிறேன்!' குறிப்பிட்டார். 

அதன் பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டனர். தவிர, சந்திப்பில் ஈரானிய அணு ஒப்பந்தம் குறித்தும், பரிஸ் காலநிலை ஒப்பந்தம் குறித்தும் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share:
Read More

Recent Posts

Popular Posts

Blog Archive